தமிழக உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக ஈஸ்வர மூர்த்தி நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக உளவுப் பிரிவு டி.ஐ.ஜி.யாக ஈஸ்வரமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னையில் தேர்தல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்ட சேஷசாயி திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல தேர்தல் பிரிவு டி.ஐ.ஜி.யாக இருந்த செந்தாமரை கண்ணன் திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.பி.ஐ. பணியில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள டி.ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி தமிழக உளவுப் பிரிவு (உள்ளூர் பாதுகாப்பு) டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications