ஒரு ஹேப்பி நியூஸ் மக்களே... வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கத்தரி வெயில் முடிய சில நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியில் தலை காட்ட இயலாத அளவிற்கு வெயில் தாக்குவதால், மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

சென்னை மற்றும் வேலூரில் நேற்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. முன்னதாக, தொடர்ந்து சில நாட்களுக்கு இந்த வெப்பம் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனால், மக்கள் வெயிலை நினைத்து பீதியில் இருந்தனர்.
இந்நிலையில், மக்களின் கவலையை போக்கும் விதத்தில் சற்று ஆறுதலான விசயத்தை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications