கார் விபத்து: அமைச்சர் சுந்தர்ராஜன் உயிர் தப்பினார்!
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: அமைச்சர் சுந்தர்ராஜன் காரின் மீது அரசு பஸ் மோதிய விபத்தில், அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
கைத்தறித்துறை அமைச்சர் சுந்தர்ராஜன் இன்று காலை ராமநாதபுரத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்பதற்காக, பரமக்குடியில் இருந்து வந்து கொண்டிருந்தார். வழக்கமாக அவர் வரும் காரில் வராமல், வேறோரு காரில் வந்து கொண்டிருந்தார். அவரது காரும் அவரை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.
பரமக்குடி-மதுரை மெயின் ரோட்டில் அமைச்சர் கார் வந்து கொண்டிருந்தபோது, மதுரையில் இருந்து வந்த அரசு பேருந்து ஒன்று அமைச்சர் காரின் பின்புறமாக மோதியது. இந்த விபத்தில் காரில் அமைச்சர் சுந்தர்ராஜன் இல்லாததால் அவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து பரமக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications