ஐடி அதிகாரிகளை மிரட்டிய அமைச்சர்களை பலியாடுகளாக்க தினகரன் பகீர் ப்ளான்... கோட்டையில் ஷாக்
ஐடி அதிகாரிகளை மிரட்டிய சம்பவத்தில் தமிழக அமைச்சர்களுக்கு நெருக்கடி முற்றுகிறது. இதனை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்தவும் டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளாராம்.
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்த போது வருமான வரித்துறை அதிகாரிகளை மிரட்ட தாம் ஏவிவிட்ட அமைச்சர்களையே பலியாடுகளாக்க டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளது அதிமுக(அம்மா) கட்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்கே நகர் பணப்பட்டுவாடா தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் அதிரடி ரெய்டு நடத்தினர். அதேபோல் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளும் சோதனைக்குள்ளாக்கப்பட்டன.
அப்போது விஜயபாஸ்கர் வீட்டுக்கு சென்ற அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் மற்றும் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர். அந்த அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தனர்.

விசாரணை வளையத்தில் அமைச்சர்கள்
தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இது தொடர்பாக அமைச்சர்கள் இருவரும் எந்த நேரமும் விசாரணைக்குட்படுத்தப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. இதனால் அமைச்சர்கள் இருவரும் பீதியில் உள்ளனர்.

கைது செய்யட்டுமே...
ஆனால் டிடிவி தினகரனோ, வருமான வரித்துறை சோதனைக்கு இடையூறு செய்ததாக கூறி அமைச்சர்களை கைது செய்யப்பட்டும். அப்போதுதான் பாஜகவை கடுமையாக விமர்சிக்க சந்தர்ப்பம் கிடைக்கும். நமக்கும் நல்ல இமேஜ் வரும் என திடமாக நம்புகிறாராம்.

என்னது சிறைக்கா?
இதை கேள்விபட்ட அமைச்சர்கள், நம்மை சிறைக்கு அனுப்பிவிட்டு இவர் நல்லவராக முயற்சிக்கிறாரே என அதிர்ந்து போயுள்ளனராம். இருப்பினும் இது தொடர்பாக எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. அதனால் முன்ஜாமீன் கேட்கவும் முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறார்கள் அமைச்சர்கள்.

பலியாடுகளா?
அப்படியே வழக்குப் பதிவு செய்யும் நிலையில் முன்ஜாமீன் கேட்கவும் தினகரன் அனுமதிப்பாரா எனவும் அமைச்சர்கள் அஞ்சுகின்றனராம். தினகரன் உத்தரவுப்படி செயல்பட போய் நம்மையே பலியாடாக்க முயற்சிக்கிறாரே என்கிற ஆதங்கத்தில் உள்ளனராம் அமைச்சர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications