சுனாமி சூறையாடிய 10வது ஆண்டு... இடிந்தகரை கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி!
நெல்லை: சுனாமி பேரலை தாக்கி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த கோர சம்பவத்தை நினைவு கூறும் வகையில் கடற்கரை பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இடிந்தகரையில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தம் நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றில் ஏராளமானோர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி, ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
தெற்காசியாவையே உலுக்கிய இந்த சுனாமி, தமிழகத்தையும் விட்டு வைக்காமல் கடற்கரை மாவட்டங்களான நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கடலூர், காரைக்கால் பகுதிகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டது. இந்த கோர சம்பவம் நிகழ்ந்து இன்றுடன் (26 ஆம் தேதி) 10 ஆண்டுகள் ஆகிறது.

ஆனாலும் நெஞ்சை விட்டு அகலாத இந்த கோர சம்பவம், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கும், பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கும், உற்றார், உறவினர்களை இழந்து தவிக்கும் மக்களுக்கும் இன்னும் அது ஆறாத வடுவாகவே உள்ளது.
இந்த கோர சம்பவத்தை நினவு கூறும்வகையில், இந்தநாளில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். குடம் குடமாய் பாலை ஊற்றி கண்ணீர் விட்டு அழுதனர்.

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில், சுனாமியால் இறந்தவர்களுக்கான அஞ்சலி செலுத்தம் நிகழ்ச்சிகள் நடந்தன. இவற்றில் ஏராளமானோர் கலந்து கொண்டு, மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர்கள் தூவியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரையில் உள்ள லூர்துமாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.பங்குதந்தை தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக கடற்கரை நோக்கி மலர்கள், பால்குடத்துடன் சென்றனர். பின்பு கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பெண்கள் கொண்டு சென்ற பால்குடம் கடலில் கலக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் இடிந்தகரை உள்பட சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். இதுபோல தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்டங்களிலும் சுனாமி நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications