காவிரி மேலாண்மை வாரியம் கோரி இன்று மனித சங்கிலி..9 கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
காவிரி மேலாண்மை வாரியம் கோரி 9 கட்சிகள் இணைந்து மனித சங்கிலி போராட்டம் நடத்த உள்ளன.
Recommended Video

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. திமுக உட்பட 9 கட்சிகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்துகின்றன.
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்பது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. திமுக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உட்பட 9 கட்சிகள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.

கடந்த 12-ந் தேதி சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக வரலாறு காணாத அளவில் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து திமுக தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் இன்று தமிழகத்தின் தலைநகரங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. புதுக்கோட்டையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனித சங்கிலியில் பங்கேற்கிறார்.
சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தஞ்சாவூரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருவாரூரில் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், கிருஷ்ணகிரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பெரம்பலூரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன், திருச்சியில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பங்கேற்கின்றனர்.
-
டிபெண்டர் கார் ரூ.1 கோடி, இன்னோவா கார் ரூ.23 லட்சம்.. உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு எவ்வளவு? -
அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்எல்ஏ! தினகரன் அதிர்ச்சி -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
கரூர் டூ கோவை தெற்கு.. செந்தில் பாலாஜிக்கு தொகுதியை மாற்றியது ஏன்? ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!












Click it and Unblock the Notifications