மத்திய அரசின் அநீதியை தமிழர்கள் மறக்கமாட்டார்கள்.. காவிரி வாரிய விவகாரத்தில் கமல் டிவிட்!

மத்திய அரசு செய்யும் அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என்று காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்து கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    காவிரி பிரச்சனையில் சாக்கு போக்கு சொல்லும் மத்திய அரசு

    சென்னை: மத்திய அரசு செய்யும் அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் என்று காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை குறித்து கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பல போராட்டங்களுக்கு பிறகும் மத்திய அரசு மறுத்து வருகிறது. முதலில் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் இருப்பது காவிரி மேலாண்மை வாரியம்தானா? ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மத்திய அரசு வழக்கு தொடுத்தது. இதற்கு உச்ச நீதிமன்றம், மே 3-ந் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.

    TN people will never forget this injustice says Kamal in Cauvery Board issue

    இந்த நிலையில் இந்த காலக்கெடு முடிய இன்னும் ஒரே வாரம் இருக்கிறது. ஆனால் மத்திய அரசு தற்போது மேலும் இரண்டு வாரம் அவகாசம் கேட்டு, நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறது. கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு இப்படி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதுகுறித்து தற்போது கமல்ஹாசன் டிவிட் செய்துள்ளார். அதில் ''காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல்,மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. "தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி" இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    காவிரி வாரியம் அமைக்க கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக கமல் கருத்து தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+