கேரள மாணவர்களுக்கு போலி இருப்பிடச் சான்று.. விஏஓ, தாசில்தார் சிக்குகிறார்கள்!
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் கேரள மாணவர்கள் சேர உதவும் வகையில் போலி இருப்பிடச் சான்றுகளை வழங்கிய விஏஓ மற்றும் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
சென்னை: நீட் தேர்வு அடிப்படையில், கேரள மாணவர்கள் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேரும் வகையில், போலி இருப்பிடச் சான்றுகளை வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த விஏஓ மற்றும் தாசில்தார் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் போலி இருப்பிடச் சான்று கொடுத்து இடம் பெற்ற 9 மாணவர்கள் மீது சென்னை பெருநகரக் காவல்துறையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.

தேசிய அளவில் நடந்த நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுதான் முறைகேடு செய்யும் நபர்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
மற்ற மாநிலங்களில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அங்குள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்காத நிலையில் உள்ளவர்கள் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அவர்கள் நேரடியாக இங்குள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது.
அதனால் தமிழகத்தில் வசிப்பதாகக் கூறி போலி இருப்பிடச் சான்றிதழ் பெற்று தமிழக மருத்துவக் கல்லூரிகளில் சேர அதிகாரிகளின் துணையுடன் முயற்சி நடைபெறுகிறது. அதனை கேரளமானவர்கள் 9 பேர் போலி இருப்பிடச் சான்று கொடுத்து சிக்கியுள்ள சம்பவம் வெளிக்கொண்டு வந்துள்ளது.
இந்த சிக்கலை சரி செய்ய முடியாமல் மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள் திணறி வருகிறார்கள். இந்த நிலையில், போலி இருப்பிட சான்றிதழ் அளித்த மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரள மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய விஏஓ, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீசார் தமிழக அதிகாரிகளை தேடும் படலத்தை தொடங்கியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications