காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடரும் கொலைகள்... பீதியில் மக்கள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று கொலை சம்பவம், ஒரு நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது.
Recommended Video

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொலை, வெடிகுண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சமீபத்தில் காஞ்சிபுரத்தை கலக்கிவந்த ரவுடி ஸ்ரீதர் மறைவுக்கு பின் அரசியல் ஆதாய கொலைகள் குறையும் என்று மக்கள் பெருமூச்சுவிட்டிருந்தனர்.
ரியல் எஸ்டேட் கொலைகள் குறைந்திருந்தன. தற்போது மீண்டும் ரவுடிகள், அரசியல்வாதிகளினால் கொலைகள் அரங்கேறி வருகின்றன.

திருப்போரூரில் ரவுடி கொலை
கடந்த 5 நாட்களில் மட்டும் மூன்று கொலை சம்பவம், ஒரு நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2ஆம் தேதி காசிமேட்டை சேர்ந்த ரவிந்தரன் என்ற ரவுடி திருப்போரூரில் வெட்டி கொலை செய்யப்பட்டான்.

முன்விரோத கொலைகள்
இந்த சம்பவத்தை தொடர்ந்து மறைமலைநகரை சேர்ந்த அஸ்வின் கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஜிஎஸ்டி சாலையில் முன்விரோதம் காரணமாக ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்டான்.

திமுக பிரமுகர் வீட்டில் குண்டு வீச்சு
சென்னையை அடுத்த பெருமாட்டுநல்லூர் பகுதியை சோந்தவர் ரவி. திமுகவைச் சேர்ந்த இவர் பெருமாட்டுநல்லூர் ஊராட்சியின் தலைவராக ஏற்கனவே பதவி வகித்துள்ளார்.
3பேர் கொண்ட மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து ரவி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டில் இருந்த பல பொருட்கள் சேதமடைந்தது. இதில் ரவியின் அண்ணன் குமார் லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.
கூடுவாஞ்சேரியில் பரபரப்பு
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கூடுவாஞ்சேரி போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் குற்றவாளிகளின் தடயங்களை சேகரித்து சென்று விசாரணை நடத்தினர். திமுக பிரமுகர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் கூடுவாஞ்சேரி பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

அரசியல் கொலைகள்
டிசம்பர் 5 ஆம் தேதி இரவு கூடுவாஞ்சேரியை அடுத்த நந்திவரம் போரூர் அதிமுக பொருளாளர் ஆக இருந்த தமிழ்ச்செல்வன் கூடுவாஞ்சேரி பஸ் நிலையம் அருகே இருக்கும் அலுவலகத்தை மூடிவிட்டு திரும்பிய போது 5 பேர் கொண்ட மர்மநபர்களால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கோவில்கள் நிறைந்த காஞ்சிபுரம் மாவட்டம் மீண்டும் கொலைகள் அரங்கேறும் மாவட்டமாக மாறி வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
அரசியல்வாதிகளும் கடும் அச்சத்தில் உள்ளார்கள்
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications