சிலை கடத்தலில் சிக்கும் தேசிய கட்சியின் படுமுக்கிய புள்ளி!
சிலை கடத்தலில் படுமுக்கிய புள்ளி சிக்குகிறாராம்.
Recommended Video

சென்னை: சிலை கடத்தல் தடுப்பு ஐஜி பொன். மாணிக்கவேல் தமிழக அரசு சீறிவருவதன் பின்னணியில் திடுக்கிடும் தகவல் ஒன்று தகவல் வெளியாகி உள்ளது.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தம்மை சுதந்திரமாக அரசு செயல்படவிடவில்லை என நீதிமன்றத்தில் பகிரங்க புகார் அளித்தார் ஐஜி பொன் மாணிக்கவேல். தமிழக அரசு வழக்கறிஞருடன் பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்திலேயே மோதினார்.

இந்த மோதல் குறித்து சிலை கடத்தல் தடுப்பு வட்டாரங்களில் நாம் விசாரித்த போது அதிர வைக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதாவது சிலை கடத்தலின் பின்னணியில் தேசிய கட்சியின் படு முக்கிய பிரமுகர் ஒருவர் இருப்பதை பொன் மாணிக்கவேல் கண்டுபிடித்துள்ளார்.
தம்மை பொன் மாணிக்கவேல் நெருங்கிவிட்டதை அறிந்து அலறியப் போன அந்த பிரமுகர் அத்தனை அஸ்திரங்களையும் ஏவிக் கொண்டே இருக்கிறாராம். அதனால்தான் கடுப்பாகிப் போன பொன் மாணிக்கவேல் பொறுத்தது போதும் என மனோகரா பாணியில் பொங்கிவிட்டாராம்.
பொன் மாணிக்கவேல் வச்ச குறியில் சரியாக சிக்குவாரா அந்த பிரபலம் என சிலைக் கடத்தல் பிரிவு காத்திருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications