வாவ்... ரூபாய் நோட்டு விவகாரம்... மக்களுக்காக போராட்டத்தில் குதித்த வேளாண்மை வங்கி ஊழியர்கள்!
மக்களிடம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க அனுமதிக்க கோரி தொடக்க வேளாண்மை வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
திண்டுக்கல்: பொதுமக்களிடம் இருந்து பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க அனுமதி கோரி மாவட்ட கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு தொடக்க வேளாண்மை வங்கி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது; டிசம்பர் 30-ந் தேதிக்குள் அனைத்து வங்கிகளிலும் கொடுத்து அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்பது மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால் தமிழகத்தில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை வாங்கக் கூடாது என தொடக்க வேளாண்மை வங்கி ஊழியர்களுக்கு மாவட்ட கூட்டுறவு வங்கிகள் உத்தரவிட்டிருந்தது.

இதனால் கடந்த 1 வார காலமாக கிராமப்புறங்களில் தொடக்க வேளாண்மை வங்கிகள் முழுமையாக செயல்படவில்லை. அனைத்து கிராமப்புற வங்கிகளிலும் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என அரசு அறிவிப்பதால் தொடக்க வேளாண்மை வங்கிகளுக்கு படையெடுத்து பொதுமக்கள் ஏமாந்தே வருகின்றனர்.
இந்த நிலைமை நீடித்தால் கிராமங்களில் தொடக்க வேளாண் வங்கிகள் இனி செயல்பட முடியாத நிலைமை உருவாகும் என்பது ஊழியர்களின் கருத்து. இதனால் தங்களையும் பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடம் வாங்கவும் அவர்களுக்கு மாற்று பணத்தை கொடுக்கவும் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு தொடக்க வேளாண் வங்கி ஊழியர்கள் போராட்டம் இன்று போராட்டம் நடத்தினர்.
சேலம், மதுரை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications