சோனியா வருகைக்கு மாணவர்கள் எதிர்ப்பு- சென்னையில் கருப்புக் கொடி காட்டி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மாணவர் கூட்டமைப்பினர் இன்று சென்னையில் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம், புதுவை சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக சோனியா காந்தி இன்று சென்னை வருகை தந்துள்ளார். அவர் திமுக தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதனிடையே சோனியாவின் வருகையைக் கண்டித்து தமிழக மாணவர் கூட்டமைப்பினர் இன்று கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர். அப்போது 2009-ம் ஆண்டு ஈழத் தமிழர் படுகொலைக்கு காங்கிரஸ் கட்சி துணை போனதாக குற்றம்சாட்டி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்துக்கு திரைப்பட இயக்குநர் வ. கவுதமன் தலைமை வகித்தார். இதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications