For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மறைந்த மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

TN Students pay tearful tributes to Abdul Kalam

கரூரில் அரசு பள்ளி மற்றும் கலைக் கல்லூரிகளில் மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவுக்கு மாணவ- மாணவிகள் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.

TN Students pay tearful tributes to Abdul Kalam

மேகாலயா மாநிலத்தில் நேற்று மாலை காலமான அப்துல் கலாம் மறைவிற்கு இந்தியா முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரூரில் அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி ஏந்தி அவரது திருவுருவ படத்திற்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.

TN Students pay tearful tributes to Abdul Kalam

இதை தொடர்ந்து அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் அவரது படத்திற்கு 200க்கும் மேற்பட்டோர் மலர்தூவி இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

TN Students pay tearful tributes to Abdul Kalam

சென்னை மாணவ, மாணவிரின் கண்ணீர் அஞ்சலி

இதேபோல சென்னை கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி மாணவ, மாணவியரும் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க கலாமுக்கு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியைக் கொடுத்தது.

English summary
Students in Tamil Nadu are paying tearful tributes to late president Dr Abdul Kalam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X