ஓரிரு நாட்களில் காங். வேட்பாளர் பட்டியல்... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
சென்னை: சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. இதேபோல் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது,

திமுக அணியில் 41 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி இன்னமும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசல் காரணமாக வேட்பாளர் பட்டியல் வெளியாவது தாமதமாகி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், ஓரிருநாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நடிகை குஷ்பு போட்டியிட விருப்பம் தெரிவிக்கவில்லை. அவருக்காக சில தொகுதிகளில் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
நாங்களோ வேட்பாளர்களின் வெற்றிக்கு குஷ்பு பாடுபடுவதற்கான பிரசாரம் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications