For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேரறிவாளன் பரோலை மீண்டும் நீட்டிக்க திருநாவுக்கரசர் கடும் எதிர்ப்பு

பேரறிவாளவனின் பரோலை மீண்டும் நீட்டிக்க தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: பேரறிவாளனின் பரோலை மீண்டும் நீட்டிக்க தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் திருநாவுக்கரசர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக காங்கிரஸுக்கு அடுத்த ஆண்டுக்குள் 50 லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். கேரளா, பஞ்சாப் இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் மோடிக்கு எதிரான அலை உருவாகி உள்ளது.

மோடிக்கு எதிர்ப்பு

மோடிக்கு எதிர்ப்பு

அதேபோல ஜிஎஸ்டியும் மோடிக்கு எதிராகவே உள்ளது. ஆகையால் லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி பிரதமராவது உறுதியாகிவிட்டது.

நடவடிக்கை இல்லை

நடவடிக்கை இல்லை

டெங்கு பாதிப்பில் தமிழக அரசும் மத்திய அரசும் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.

பரோல் நீட்டிக்க எதிர்ப்பு

பரோல் நீட்டிக்க எதிர்ப்பு

ஆர்கே நகர் தொகுதியில் திமுக போட்டியிட்டு அமோக வெற்றி பெறும். பேரறிவாளனுக்கு மீண்டும் பரோலை நீட்டிப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.

புதிய தலைவர் நியமனம்?

புதிய தலைவர் நியமனம்?

தமிழகத்தில் உட்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்பது விரைவில் தெரியவரும்.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

English summary
TamilNadu Congress President Thirunavukkarasar has opposed the extend of Perarivalan's Parole.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X