TNPSC: சித்தாண்டியின் சித்து வேலைகள்.. மனைவி சண்முகப்பிரியாவும் உடந்தை.. நெருக்கும் போலீஸ்!
சித்தாண்டி மனைவிக்கும் முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது
சென்னை: சித்தாண்டியின் சித்து வேலைகளில் அவரது மனைவி சண்முகப்பிரியாவும் சிக்கி உள்ளார்... குரூப் 4 தேர்வு முறைகேட்டில் தோண்ட தோண்ட ஏகப்பட்ட ஷாக்குகள் நமக்கு தினமும் கிடைத்த படியே உள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த குரூப் 4 தேர்வினை சுமார் 16 லட்சம் பேர் எழுதினர். இத்தனை பேர் பாடுபட்டு, படித்து தேர்வு எழுதினாலும், அதிர்ஷ்டம் என்னவோ கீழக்கரை, ராமேசுவரத்துக்குதான் அடித்தது.
மொத்தம் 39 பேர், முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் சர்ச்சையானது... சிபிசிஐடி போலீசார் விசாரிக்க ஆரம்பித்தனர்.. அடுக்கடுக்காக அம்பலங்கள்.. நிறைய முறைகேடுகள்.. பல கோடி பணம் கைமாறியது என வெளிச்சத்துக்கு வந்தது. இதில் சம்பந்தப்பட்ட அரசு பணியில் இருப்பவர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

சிவகங்கை
அதிலும் ஆடு மேய்க்கும் திருவராஜ்-க்குதான் அடித்தது லக்.. மாநிலத்திலேயே முதல் இடத்தை பிடித்து இந்த மோசடியை வெளியே கொண்டு வந்தது சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரை சேர்ந்த மிஸ்டர் திருவராஜ் தான்.. இதில சிக்கியவர்தான் அதே ஊரைச் சேர்ந்த சித்தாண்டி என்ற 45 வயது நபர். இவர் போலீஸாக இருக்கிறார்... அதிகாரிகளுக்கே தண்ணி காட்டி வந்த இவர் இப்போது போலீசாரின் பிடியில் உள்ளார்.

சண்முகப்பிரியா
இவரை அன்றிலிருந்தே தேடும்போதுதான், மனைவி சண்முகப்பிரியா, சித்தாண்டியின் தம்பி வேல்முருகன் உள்ளிட்ட சொந்தக்காரர்களின் பெயர்களும் அடிபட ஆரம்பித்தன. இவர்கள் எல்லோருமே இணைந்து, தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள் சிலரை இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று அடுத்தடுத்து கவர்ன்மென்ட் வேலையும் வாங்கி தந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

வாக்குமூலம்
ஆரம்பத்தில் இந்த விவகாரம் வெளியே வர ஆரம்பித்ததுமே சித்தாண்டி தலைமறைவானார்... சென்னை எழிலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த அவருடைய மனைவி சண்முகபிரியாவும் ஆபீசுக்கு வரவில்லை.. லீவு எடுத்து கொண்டு தலைமறைவானார். இப்போது சித்தாண்டி கைதாகி உள்ள நிலையில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. "2 கோடி ரூபாய் பணம் வாங்கி கொண்டு, 22 பேரை கவர்ன்மென்ட் வேலைக்கு சேர்த்து விட்டேன் என்று வாக்குமூலம் தந்துவருகிறார் சித்தாண்டி.

கணக்கு முடக்கம்
இப்போது சண்முகபிரியாவை பிடிக்கவும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் பிரியாவின் வங்கிக் கணக்குகளை முன்னதாகவே சிபிசிஐடி முடக்கியுள்ளது. சித்தாண்டி விவகாரத்தை பொறுத்தவரையில் மாட்டியுள்ளது சின்ன மீனா? அல்லது பெரிய மீன் யாரேனும் சிக்குவார்களா என்பது இனிமேல்தான் தெரியவரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications