விரைவில் குரூப்-4 தேர்வு முடிவுகள்: டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீத கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரூப்-4 தேர்வு முடிவு விரைவில் வெளியிடப்படும் என டின்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 556 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பொறுப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைத்தது.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 பணிகளுக்கு எழுத்து தேர்வை கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தியது.

இந்த தேர்வை 12 லட்சத்து 21 ஆயிரத்து 167 பேர் எழுதினார்கள். அவர்களில் என்ஜினீயரிங் படித்தவர்களும், கலை அறிவியல் படிப்பு படித்த பட்டதாரிகளுமே அதிகம் பேர் இருந்தனர்.

இந்த நிலையில் தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணனிடம் கேட்டதற்கு அவர்,

"12 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதிய குரூப்-4 தேர்வு விடைத்தாள்களை சரியாக மதிப்பீடு செய்து முடித்துவிட்டோம்.அவற்றை சரிபார்த்து தேர்வு முடிவை வெளியிட அனைத்து வேலைகளும் முடிந்துவிட்டன.

தற்போது இட ஒதுக்கீட்டின்படி ஆட்களை தேர்வு செய்து பட்டியல் தயாரித்து வருகிறோம். விரைவில் முடிவை வெளியிட ஏற்பாடு செய்துவருகிறோம். அதற்கான பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்"என்று தெரிவித்தார்.

மேலும்,கடந்த டிசம்பரில் நடைபெற்ற குரூப்-2 முடிவுகளும் எப்போது வெளியிடப்படும் என எதிர்பார்த்து காத்துள்ளனர் தேர்வு எழுதிய பட்டதாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+