நீங்க டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு எழுதினீங்களா? ரிசல்ட் வந்துருச்சு!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை: சுமார் 15 லட்சம் பேர் எழுதிய டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முடிவுகள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக அரசுத் துறைகளில் காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவுகளில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுகள் கடந்த ஆண்டும் நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 296 மையங்களில் சுமார் 15 லட்சம் பேர் தேர்வெழுதினர். இந்த தேர்வுகளுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நேர்முகத் தேர்வு கிடையாது என்பதால் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றாலே அரசுப் பணி உறுதியாகிவிடும் என்பதால் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், என்ஜினியரிங் பட்டதாரிகள் ஆகியோரும் இத்தேர்வை ஆர்வமுடன் எழுதியிருந்தனர்.