பா.ராமச்சந்திர ஆதித்தனுக்கு தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இரங்கல்
சென்னை: மாலைமுரசு அதிபர் பா.ராமச்சநதிர ஆதித்தன் மறைவுக்கு தமிழ்ாடு பத்திரிக்கையாளர்கள் யூனியன் இரங்கல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து யூனியன் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பத்திரிக்கையாளர்களின் ஜாம்பவானும், பல்லாயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு காவலராக விளங்கியவரும், மாலைமுரசு அதிபருமான பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் மறைவு ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும்.

தன் பத்திரிக்கை மூலம் பல சமூகப் புரட்சிகளையும், பல்வேறு சாதனைகளையும் செய்து பல பிரபலங்களின் புகழுக்கும், பெருமைக்கும் து்மையாக இருந்த, இவருடைய மறைவுக்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசியல் மட்டுமின்றி, இந்திய அரசியல், சினிமா, விளையாட்டு, ஆன்மீகம் என அனைத்துத் துறைகளிலும் தன் பத்திரிக்கையின் மூலமாக பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் என்று கூறியுள்ளார்.
சங்க நிர்வாகிகள் பா. ராமச்சந்திர ஆதித்தன் உடலுக்கு மலரஞ்சலியும் செலுத்தினர்.












Click it and Unblock the Notifications