சமஸ்கிருதத்தை தமிழர்கள் கற்க வேண்டும்.. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை

தமிழர்கள் பிறமொழிகளை கற்றுக்கொண்டால் தான் முன்னேற முடியும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழர்கள் தமிழ் மொழியோடு பிற மொழிகளையும் கற்றுக்கொண்டால் வாழ்வில் முன்னேற உதவியாக இருக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச். ராஜாவின் தந்தை ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது.

To Achieve in life Tamilian should learn other language also says Governor

இதில் அகராதியின் முதல் பிரதியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் வெளியிட, சமஸ்கிருத பாரதி அமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் தினேஷ் காமத் அதனைப் பெற்றுக்கொண்டார்.

பின்னர் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழ் மொழியோடு பிற மொழிகளையும் கற்றுக்கொள்வது மிகவும் முக்கியம், அவ்வாறு கற்றுக் கொள்வது வாழ்வில் முன்னேற உதவியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் சமஸ்கிருதம் மொழியில் பல பொக்கிஷங்கள் அடங்கியுள்ளதாகவும், அதனை தமிழர்கள் பயில வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த விழாவில் எச். ராஜா, பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்திரராஜன், சாலமன் பாப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டரனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+