விண்ணுக்கு மனிதனை அனுப்பும் சோதனை ராக்கெட்.. டிசம்பரில் ஏவும் இஸ்ரோ!
சென்னை: இந்தியாவில் முதன்முறையாக மனிதனை விண்ணுக்கும் அனுப்பும் சோதனை அடிப்படையிலான ராக்கெட் அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அதிகாரி பிரசாத் தெரிவித்துள்ளார்.
விண்ணுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது. ஜி.எஸ்.எல்.வி.- மார்க் 3 என்ற அந்த ராக்கெட் அடுத்த மாதம் 2வது வாரத்தில் சோதனை அடிப்படையில் விண்ணில் ஏவப்படுகிறது.

விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இன்னும் பத்து ஆண்டுகள் ஆகும் என்றாலும் இதை சோதனை முறையில் இஸ்ரோ செய்ய உள்ளது. ஜி.எஸ்.எல்.வி.-மார்க் 3 இஸ்ரோவால் தயாரிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 4 டன் அளவுக்கு பொருட்களை ஏற்றி அனுப்ப முடியும். இதற்கான கிரையோஜெனிக் என்ஜினை நெல்லையில் உள்ள இஸ்ரோவின் மகேந்திரகிரி அமைப்பில் சோதனை செய்து வருகிறார்கள்.
இது குறித்து இஸ்ரோ அதிகாரி பிரசாத் கூறுகையில்,
மனிதனை விண்ணுக்கு அனுப்ப வசதியாக சோதனை அடிப்படையில் ஜி.எஸ்.எல்.வி.-மார்க் 3 ராக்கெட்டை டிசம்பர் 15ம் தேதியில் இருந்து 20ம் தேதிக்குள் விண்ணில் செலுத்த உள்ளோம். தேதி இன்னும் முடிவாகவில்லை.
இது மாதிரி ராக்கெட் தான். இதில் 3 மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அழைத்து வர முடியும். ராக்கெட்டில் கப் கேக் போன்ற அறை உள்ளது. அந்த அறை 3 டன் எடையும் 2.7 மீட்டர் உயரமும், 3.1 மீ்ட்டர் சுற்று வட்டமும் கொண்டது. ராக்கெட்டை விண்ணில் ஏவியபிறகு 126 கிமீ உயரத்தில் அந்த அறை தனியாக பிரிந்துவிடும்.
வீரர்கள் யாரும் இல்லாத அந்த அறை பின்னர் பூமிக்கு திரும்பும். அது 3 பாராசூட்கள் மூலம் பத்திரமாக தரையிறங்கும். இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் மனிதனை விண்ணுக்கு அனுப்பியுள்ளன. இந்த சோதனை வெற்றி பெற்றால் மனிதனை விண்ணுக்கு அனுப்பிய நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெறுவோம் என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications