ரயிலில் கட்டுக்கட்டாக பார்சலில் வந்த புகையிலை... வழக்கை தட்டிக் கழிக்கும் அதிகாரிகள்...
நெல்லை: ரயில் நிலையத்துககு வந்த ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலில் கட்டுகட்டாக புகையிலை சிக்கியதால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு தாவியில் இருந்து மும்பைக்கு வாரம் ஒரு முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின் சரக்கு பெட்டியில் டெல்லியில் இருந்து கோவைக்கு 29 மூட்டை புகையிலை அனுப்பப்பட்டது. கோவையில் இந்த மூட்டைகளை யாரும் பெற்று கொள்ளாததால் இந்த மூட்டைகள் இரவில் நெல்லை வந்து இறங்கியது.

சரக்கு பெட்டியில் சந்தேகத்து இடமாக இருந்த இந்த மூட்டைகளை நெல்லை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். நெல்லை ரயில்வே காவல் நிலையம் கொண்டு சென்று மூட்டைகளை ஆய்வு செய்தனர்.
29 மூட்டைகளிலும் புகையிலை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒவ்வொரு மூட்டையிலும் 2 ஆயிரம் பாக்கெட்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கோவையில் உள்ள ஒரு நபருக்கு புகையிலை மூட்டை அனுப்பி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் அந்த மூட்டையை இதுவரை யாரும் காவல் நிலையம் வந்து வாங்கி செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த மூட்டைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரயில்வே நிர்வாகத்துக்கு உள்பட்ட பகுதியில் சிககியிருப்பதால் புகையிலை பண்டல்களை பெற்று கொள்ள முடியாது என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து இரு துறையை சேர்ந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். வட மாநிலங்களில் புகையிலை விவசாய பொருளாக இருப்பதால் அதை நிகோடின் உள்ளிட்ட போதை பொருட்கள் பட்டியலில் இருந்தால் மட்டுமே பறிமுதல் செய்ய முடியும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து புகையிலையை சோதனைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. புகையிலையில் கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தால் அவற்றை அழிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Tobacco Bundels seized in Jammu thavi Mumbai train bounded nellai. It Worth Rs. 10 lacks












Click it and Unblock the Notifications