”உருக்காத வெண்ணை தந்தேன்,ஒருக்காலும் கணவனை பிரியாத வரம் தா”
சென்னை: இன்று காரடையான் நோன்பு பெண்களால் கொண்டாடப் படுகிறது.
தங்களின் மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும்.
மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.

கணவன் உயிரை மீட்ட பதிவிரதை:
சத்தியவான் - சாவித்திரி கதை தெரியாதவர்களே இருக்க முடியாது.எமனிடம் இருந்து தன் கணவன் உயிரை மீட்டு வந்த அப்பதிவிரதையின் நினைவாக இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.இக்கதையை கேட்பவர்கள் தீர்க்க ஆயுளுடன் இருப்பார்கள்.

கலச பூஜை:
விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும்.

கணவனின் நீண்ட ஆயுள்:
"உருகாத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்" என வேண்டி நோன்புக் கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார் கள். "மாசிக்கயிறு பாசி படியும்" என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக்கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

காரமணி கலந்த கார அடை:
இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். கார்காலத்தின் முதல் பருவத்தில் விளைந்த நெல்லைக் குத்தி கிடைக்கும் அரிசி மாவில், இனிப்பு, காராமணி சேர்த்து அடை தயாரிக்க வேண்டும்.

மாங்கல்ய பலம்:
இதுவே, காரடை ஆகும். இந்த பெயராலேயே இந்த விரதத்திற்கும் "காரடையான் நோன்பு" என்று பெயர் அமைந்தது. அன்று நல்ல நேரம் பார்த்து பெண்கள் மாங்கல்ய கயிறு மாற்றிக்கொள்வர்.

தீர்க்க சுமங்கலியாக்கும் விரதம்:
இக்காரடையான் விரத நோன்பு இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.சுமங்கலிப்பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications