சரியும் தக்காளி... உயரும் உருளை... உச்சத்தில் சின்ன வெங்காயம்!
சென்னை: காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்து, காய்கறி விலை சரிவடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டானது ஆசிய அளவில் பெரிய சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் தேவையான அனைத்து வகை காய்கறிகளும் வினியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் விளையும் காய்கறிகள் அனைத்தும், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன.
தமிழகத்தின் பிற பகுதிகளில் கிடைப்பதற்கு அரிதான காய்கறிகள் கூட கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன.

காய்கறி வரத்து அதிகரிப்பு
தற்போது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தேனி, கம்பம், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறி விலை ‘மள மள'வென சரிவடைந்துள்ளது.

விலை சரிவு
இதனால் தக்காளி, கேரட், பீன்ஸ், நூல்கோல், சவு-சவு, இஞ்சி உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலை பெருமளவில் குறைந்துள்ளது. அதேசமயம் உருளைக்கிழங்கு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரித்தே காணப்படுகிறது.

தக்காளி வரத்து அதிகம்
கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய்வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இப்போது சட்டென்று விலை குறையக் காரணம் வரத்து அதிகரித்துள்ளதே என்கின்றனர் வியாபாரிகள்.

உருளை விலை உயர்வு
அதே சமயம் ஊட்டி உருளைக்கிழங்கு கிலோ 42 ரூபாய்க்கும் கர்நாடகா உருளைக்கிழங்கு ரூ.35க்கும், ஆக்ரா உருளை கிலோ 32 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சாம்பார் வெங்காயம்
சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாயிலேயே நிற்கிறது. பெரிய வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிலோ 20 ரூபாய்
கத்தரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 10 ரூபாய்க்கும், பீன்ஸ் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரை - 25 ரூபாய்க்கும் முருங்கைக்காய் - 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் - 20 ரூபாய்க்கும், புடலங்காய் - 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காய் விலை
மேலும், கோயம்பேடு சந்தையில் தேங்காய் 4 ரகமாக பிரிக்கப்பட்டு, ஒரு தேங்காயின் விலை, முதல் ரகம் 24 ரூபாய்க்கும், 2-ம் ரகம் 20 ரூபாய்க்கும், 3-ம் ரகம் 15 முதல் 17 ரூபாய்க்கும், 4-ம் ரகம் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை மேலும் குறையும்
பருவமழை பெய்துள்ளதால் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே விலை மேலும் சரியவாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை சரிவடையத்தொடங்கியுள்ளதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications