சரியும் தக்காளி... உயரும் உருளை... உச்சத்தில் சின்ன வெங்காயம்!
சென்னை: காய்கறிகள் விளைச்சல் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு சந்தையில் வரத்து அதிகரித்து, காய்கறி விலை சரிவடைந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, கோயம்பேடு மார்க்கெட்டானது ஆசிய அளவில் பெரிய சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும் தேவையான அனைத்து வகை காய்கறிகளும் வினியோகம் செய்யப்படுகின்றன.
மேலும், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் விளையும் காய்கறிகள் அனைத்தும், கோயம்பேடு மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வருகின்றன.
தமிழகத்தின் பிற பகுதிகளில் கிடைப்பதற்கு அரிதான காய்கறிகள் கூட கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விற்பனைக்கு வருகின்றன.

காய்கறி வரத்து அதிகரிப்பு
தற்போது ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தேனி, கம்பம், ஒட்டன்சத்திரம் போன்ற பகுதிகளில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காய்கறி விலை ‘மள மள'வென சரிவடைந்துள்ளது.

விலை சரிவு
இதனால் தக்காளி, கேரட், பீன்ஸ், நூல்கோல், சவு-சவு, இஞ்சி உள்ளிட்ட பெரும்பாலான காய்கறிகளின் விலை பெருமளவில் குறைந்துள்ளது. அதேசமயம் உருளைக்கிழங்கு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றின் விலை அதிகரித்தே காணப்படுகிறது.

தக்காளி வரத்து அதிகம்
கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் ஒரு கிலோ தக்காளி 85 ரூபாய்வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. இப்போது சட்டென்று விலை குறையக் காரணம் வரத்து அதிகரித்துள்ளதே என்கின்றனர் வியாபாரிகள்.

உருளை விலை உயர்வு
அதே சமயம் ஊட்டி உருளைக்கிழங்கு கிலோ 42 ரூபாய்க்கும் கர்நாடகா உருளைக்கிழங்கு ரூ.35க்கும், ஆக்ரா உருளை கிலோ 32 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

சாம்பார் வெங்காயம்
சாம்பார் வெங்காயத்தின் விலை கிலோ 50 ரூபாயிலேயே நிற்கிறது. பெரிய வெங்காயம் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிலோ 20 ரூபாய்
கத்தரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கேரட் 40 ரூபாய்க்கும், பீட்ரூட் 10 ரூபாய்க்கும், பீன்ஸ் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவரை - 25 ரூபாய்க்கும் முருங்கைக்காய் - 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் - 20 ரூபாய்க்கும், புடலங்காய் - 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தேங்காய் விலை
மேலும், கோயம்பேடு சந்தையில் தேங்காய் 4 ரகமாக பிரிக்கப்பட்டு, ஒரு தேங்காயின் விலை, முதல் ரகம் 24 ரூபாய்க்கும், 2-ம் ரகம் 20 ரூபாய்க்கும், 3-ம் ரகம் 15 முதல் 17 ரூபாய்க்கும், 4-ம் ரகம் 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை மேலும் குறையும்
பருவமழை பெய்துள்ளதால் விளைச்சல் அதிகரித்து சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளது. எனவே விலை மேலும் சரியவாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். உச்சத்தில் இருந்த காய்கறிகளின் விலை சரிவடையத்தொடங்கியுள்ளதால் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications