இன்று கர்நாடகா பந்த்- கர்நாடகா வழியாக லாரிகளை இயக்க வேண்டாம் என வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற இருப்பதால் கர்நாடக மாநிலத்துக்கு லாரிகளை இயக்க வேண்டாம் என லாரி உரிமையாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு தெரிவித்து 4 நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
மைசூர், மாண்டியா, ஸ்ரீரங்கப்பட்டினா பகுதிகள் போர்க்களமாக காட்சி தருகின்றன. தமிழக- கர்நாடகா எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுவதால் பதற்றம் நீடித்து வருகிறது.












Click it and Unblock the Notifications