சட்டசபைத் தேர்தல் சோதனை- 5 மாநிலங்களில் இதுவரை ரூ.57 கோடி பறிமுதல்; முதலிடத்தில் தமிழகம்!
சென்னை: தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தல் சோதனையில் 5 மாநிலங்களில் கிட்டதட்ட ரூபாய் 57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தமிழகத்தில்தான் அதிகம் என்றும் பறக்கும் படையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களில் பறக்கும்படை அதிகாரிகளும், கண்காணிப்புக் குழுவினரும் நடத்தப்பட்ட சோதனைகளில் இதுவரை ரூபாய் 57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.22.75 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழகம்தான் தேர்தல் கால பணப் பறிமுதலில் முதலிடத்தில் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், அசாமில் ரூபாய் 12.33 கோடியும், மேற்கு வங்கத்தில் ரூபாய் 11.90 கோடியும், கேரளாவில் ரூபாய் 10.20 கோடியும், புதுச்சேரியில் ரூபாய் 60.88 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications