"விஜயகாந்த் பஸ் டிரான்ஸ்போர்ட்".. இது சென்னை கலாட்டா!!
சென்னை: சென்னையில் ஒரு கூத்து நடந்துள்ளது. இது யாருடைய சேட்டை என்று தெரியவில்லை. ஆனால் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
சென்னை அரசுப் பேருந்தில் ஒருவர் ஏறியுள்ளார். குரோம்பேட்டையில் ஏறிய அவர் டிக்கெட் வாங்கியுள்ளார். டிக்கெட்டை வாங்கிப் பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி. காரணம், டிக்கெட்டில் தெள்ளத் தெளிவாக விஜயகாந்த் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருந்தது.

என்னடா இது என்று அதிர்ச்சி அடைந்த அவர் உடனே அதை செல்போனில் எடுத்து வாட்ஸ் ஆப் மூலம் நண்பர்கள் தெரிந்தவர்களுக்குப் பரப்பி விட்டார். இப்போது அது "நெட்டுத்தீ" என வேகமாகப் பரவி வருகிறது.
போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கும் இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. குழப்பம் ஏற்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட நபரே இப்படி ஒரு டிக்கெட்டை தயாரித்து வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளாரா அல்லது வேறு யாரேனுக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications