போயஸ் தோட்டத்துல பூப்பறிச்சிட்டிருக்கீங்களா?.. அதிமுக மீது டி.ஆர். ஆவேசத் தாக்குதல்!
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் வாய்திறக்காமல் உள்ளதாக நடிகரும் லட்சிய திமுகவின் தலைவருமான டி.ராஜேந்தர் ஆவேசமாககேட்டுள்ளார்.
சென்னை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் வாய்திறக்காமல் உள்ளதாக நடிகரும் லட்சிய திமுகவின் தலைவருமான டி.ராஜேந்தர் குற்றம்சாட்டியுள்ளார். அதிமுக எம்பிக்கள் வீரத்துடன் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
லட்சிய திமுகவின் தலைவரும் நடிகருமான டி.ராஜேந்தர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனக்கான பாணியில் கோர்வையாக பேசிய அவர் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக எம்பிக்கள் வாய்திறக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டினார்.

அதிமுக எம்பிக்கள் போயஸ் தோட்டத்தில் பூப்பறித்துக் கொண்டிருக்கிறார்களா என்று கேள்வி கேட்டார். டெல்லி சென்ற அதிமுக எம்பிக்களை பிரதமர் சந்திக்காதது குறித்து கருத்து தெரிவித்த டி.ஆர் உங்களின் லட்சணம் அப்படி உள்ளது என அவர்களை சாடினார்.
எம்பிக்கள் வீரத்துடன் கேள்விக் கேட்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழகத்தில் யாரும் வாலாட்டக்கூடாது என்றும் டிஆர் வலியுறுத்தினார். தான் பூங்காநகர் எம்எல்ஏவாக இருந்தபோது பலமுறை அரசை எதிர்த்து கேள்வி கேட்டதாகவும் அவர் நினைவு கூர்ந்தார்.
ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று கூறிய டி.ராஜேந்தர் அதனை எதற்காகவும் விட்டுகொடுக்க முடியாது என்றார். தமிழர்களின் பாரம்பரியவிளையாட்டான ஜல்லிக்கட்டை பாஜக ஆதரிவில்லை என்றும் டி.ராஜேந்தர் குற்றம்சாட்டினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications