தண்ணியை போட்டு தகராறு .. அதிமுக கூட்டணி த.வெள்ளையன் மகன் அதிரடி கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையனின் மகன் டைமண்ட் ராஜ் என்பவரை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த. வெள்ளையன் மகன் டைமண்ட் ராஜ். இவர் நேற்று நள்ளிரவுவாக்கில் கோயம்பேட்டில் உள்ள ஒரு ஸ்பாவுக்குப் போயுள்ளார். நண்பர்களோடு அங்கு சென்ற டைமண்ட் ராஜ் மது போதையில் இருந்துள்ளார்.

Traders leader Vellayan's son arrested for 'robbery'

பின்னர் ஸ்பாவில் அவர்கள் கலாட்டாவில் இறங்கியுள்ளனர். அங்கிருந்த பொருட்களை எடுத்து தங்களது காரில் ஏற்றியுள்ளனர். ஸ்பாவில் இருந்தவர்களுடன் தகாறு செய்துள்ளனர். மிரட்டி வழிப்பறியும் செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஸ்பா நிர்வாகிகள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் டைமண்ட் ராஜ், அவரது நண்பர்களான பாலாஜி, திலீப் யாதவ் ஆகியோரைக் கைது செய்தனர்.

சமீபத்தில்தான் முதல்வர் ஜெயலலிதாவை த. வெள்ளையன் போயஸ் கார்டன் இல்லத்திற்குச் சென்று சந்தித்துப் பேசி விட்டு வந்திருந்தார். இந்த நிலையில் அவரது மகன் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+