காமன்வெல்த் மாநாடுக்கு எதிர்ப்பு: நவ.12ல் வணிகர்கள் கடையடைப்பு
சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 12ம் தேதி தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளனர்.
இலங்கை தலைநகர் கொழும்பில், இம்மாதம், 15ம் தேதியிலிருந்து, 17ம் தேதி வரை, காமன்வெல்த் நாடுகளின் மாநாடு நடக்கிறது. இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது, ஏராளமான தமிழர்கள், ராணுவத்தால், கொல்லப்பட்டனர். எனவே, மனித உரிமை மீறல்கள் நடந்த இலங்கையில், காமன்வெல்த் நாடுகளின் மாநாடுகள் நடத்தக் கூடாது. அப்படியே நடந்தாலும், அதில், இந்தியா பங்கேற்க கூடாது என, தமிழகத்தில் உள்ள, அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக, தமிழக சட்டசபையில், ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில், செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய இசைப்பிரியா, இலங்கை ராணுவத்தால், உயிருடன் பிடிக்கப்படுவது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்படுவது தொடர்பான, வீடியோ காட்சிகளை, பிரிட்டனின், சேனல் -4 டிவி நிறுவனம், சமீபத்தில் வெளியிட்டது. இதனால், காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க கூடாது என்ற, எதிர்ப்பு குரல், மேலும் வலுப்பட்டது.
இந்த நிலையில் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று கோரி வருகிற 12-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications