பஸ் கட்டண உயர்வை கண்டித்து விஸ்வரூபம் எடுக்கும் மாணவர்கள் போராட்டம்... போக்குவரத்து ஸ்தம்பிப்பு
பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் அரசு பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பேருந்து கட்டணத்தை திடீரென மாநில அரசு உயர்த்தியது. டீசல் விலையுயர்வு, போக்குவரத்து ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த விலையேற்றம் என தமிழக அரசு தெரிவித்தது. மேலும் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில்தான் பேருந்து கட்டணம் குறைவு என்றும் 7 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அரசு விளக்கம் கூறியது.

எனினும் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற கோரி பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அது முடியாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துவிட்டார். இதையடுத்து அரசியல் கட்சிகளும் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளன.
இந்நிலையில் திண்டுக்கல், தஞ்சை, மதுரை வேலூர், தூத்துக்குடி, கோபி, காரைக்குடி, புதுக்கோட்டை, பழனி ஆகிய இடங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் 3-ஆவதுி நாளாக தொடர்கிறது. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டது. பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளதால் இந்த போராட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications