டிராபிக் ராமசாமி தற்கொலை முயற்சி போராட்டம்.. பாரிமுனையில் குவிந்த மக்களால் வாகன நெரிசல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரிமுனையில் உள்ள வங்கிக் கட்டடத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தற்கொலை போராட்டம் நடத்தியதால் பாரிமுனையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டில் உள்ள அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். கொள்ளையர்கள் ஆட்சியை கலைக்க வேண்டும், கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிராபிக் ராமசாமி குறளகம் அருகே வங்கிக் கட்டடத்தில் தற்கொலை போராட்டம் நடத்தினார்.

இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications