லோடு ஏற்றும் மினி டெம்போவில் 'சோலோ'வாக வந்து வாக்கு சேகரித்த டிராபிக் ராமசாமி
சென்னை: மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் மயிலாப்பூரில் போட்டியிடும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மினி டெம்போவில் பிரச்சாரம் செய்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் பாதுகாப்பு கழகம் சார்பில் அதன் தலைவரம், சமூக ஆர்வலருமான டிராபிக் ராமசாமி போட்டியிடுகிறார். நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் டிராபிக் ராமசாமி லோடு ஏற்றிச் செல்லும் மினி டெம்போவில் மைலாப்பூர் தொகுதியில் வீதி, வீதியாக வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட அதிமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.
மறக்காமல் தங்கள் கட்சியின் சின்னமான பேனா நிப்புக்கு வாக்களிக்குமாறு அவர் மக்களை கேட்டுக் கொண்டார். பிற கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு கார், திறந்த ஜீப்பில் வருகையில் ராமசாமி மினி டெம்போவில் வந்து தனது நிதி நிலைமையை மக்களுக்கு எடுத்துரைத்துள்ளார்.
டெம்போவில் அவர் மற்றும் 2 பேர் என மொத்தம் 3 பேர் தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications