For Daily Alerts
Just In
புகாரை வாங்காத போலீஸ் தர்ணாவில் குதித்த டிராபிக் ராமசாமி
சென்னை: புகாரை வாங்காத காவலர்களைக் கண்டித்து கிண்டி காவல்நிலையம் முன்பு சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
டிராபிக் ராமசாமி இன்று காலை 11.30 மணியளவில் கிண்டி காவல்நிலையத்திறகு சென்றார். அங்கிருந்த காவலர்களிடம், பேசிய அவர், தன்னைப் பற்றி அவதூறு கூறப்படுதாகவும் புகார் கொடுக்க வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அப்போது அங்கிருந்த போலீசார் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் வந்த பிறகுதான் புகாரை வாங்க முடியும் என்று கூறியுள்ளனர். இதனால் டிராபிக் ராமசாமி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திடீரென்று கிண்டி காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் டிராபிக் ராமசாமி. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
Traffic Ramaswamy Dharna protest near Guindy police station.
Story first published: Saturday, June 13, 2015, 15:44 [IST]