வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் வழித்தடம் நாளை முதல் மாற்றம்: திருச்சி-விழுப்புரம் இடையே தற்காலிக ரத்து
சென்னை: தமிழகத்தில் வைகை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வழித்தடங்கள் நாளை முதல் மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த செய்திக் குறிப்பில், "விருத்தாச்சலம்-விழுப்புரம் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் விருத்தாச்சலம்-திருவெண்ணெய்நல்லூர் இடையேயான பகுதியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனைத்தொடர்ந்து ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு இருமார்க்கமாகவும் இயக்கப்படும் பயணிகள் ரயில், நாளை முதல் நவம்பர் 5 ஆம் தேதி வரை திருச்சி-விழுப்புரம் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.
மும்பையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் லோக்மான்யாதிலக் - மதுரை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (11043), நாளை விழுப்புரம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும். அதேபோல, மறுமார்க்கத்தில் மதுரை - லோக்மான்யாதிலக் (11044) எக்ஸ்பிரஸ் ரயில், நாளை விருத்தாச்சலம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விழுப்புரம் வழியாக இயக்கப்படும்.
நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில் (16352), நவம்பர் 1 ஆம் தேதியன்று விருதாச்சலம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விழுப்புரம் வழியாகவும், நவம்பர் 5 ஆம் தேதி திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாகவும் இயக்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (16127), நவம்பர் 2 ஆம் தேதி விழுப்புரம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விருத்தாச்சலம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் நவம்பர் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையிலான நாட்களில் விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி வழியாக இயக்கப்படும்.
மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் (12636), நவம்பர் 2 ஆம் தேதி விருத்தாச்சலம், கடலூர் போர்ட் ஜங்ஷன், விழுப்புரம் வழியாகவும், 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரையில் திருச்சி, மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாகவும் இயக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications