ஜெயலலிதா நலம்பெற வேண்டி அப்பல்லோ முன்பு திருநங்கைகள் பிரார்த்தனை
சென்னை: சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டும் என்று திருநங்கைகள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற வேண்டும் என திருநங்கைகள் பூசனிக் காய்களை உடைத்து வேண்டினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 17 நாட்களாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு சர்வ சமயத்தினரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இன்று முன்னாள் அமைச்சர் வளர்மதி தலைமையில் ஏராளமான திருநங்கைகள் பூசணிக்காய்களை உடைத்து வழிபாடு நடத்தினர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், 5 நாள் சிறப்பு யாக வழிபாட்டின் 2ம் நாளான நேற்று முருகனுக்கு சிறப்பு யாகங்கள் மற்றும் ஆயுள்மந்த்ரா யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன் சரஸ்வதி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு கூட்டு பிரார்த்தனை, கலச பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும், குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ராமசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, மற்றும் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்டம், போடியில் நந்தவன காளியம்மன் கோவில், மற்றும் முத்துமாரியம்மன் கோவில்களில், முதல்வர் ஜெயலலிதா விரைந்து குணமடைய வேண்டி சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications