குஷ்புவுக்கு எதிராக கொந்தளித்த திருநங்கைகள்.. சத்தியமூர்த்தி பவன் முற்றுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருநங்கைகள் குறித்து அவதூறாக கருத்துக் கூறியதாக குஷ்புவை எதிர்த்து சென்னை சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஓட்டுரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் களமிறங்கவும் சில திருநங்கைகள் திட்டமிட்டுள்ளனர்.

Transgenders protest against Kushboo

சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் தேவி என்ற திருநங்கை சென்னை ஆர்.கே. நகரில் போட்டியிட உள்ளார். திருநங்கை ராதிகாவுக்கு சேலத்தில் வாய்ப்பு அளிப்பதாக தேமுதிக உறுதி அளித்திருக்கிறது. இதேபோல், திருநங்கை சுதா அதிமுகவில் வாய்ப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.

கடந்த லோக்சபா தேர்தலில் மதுரையில் சுயேச்சையாக போட்டியிட்ட பாரதி கண்ணம்மா, அதன் பிறகு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தார். தற்போது அதிலிருந்து விலகிவிட்ட நிலையில், அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி சார்பில் போட்டியிட பாரதி கண்ணம்மாவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் பேட்டியொன்றில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு திருநங்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதாகத் தெரிகிறது. திருநங்கைகள் அரசியல் உரிமை கோரக்கூடாது என்ற கோணத்தில் அப்பேட்டியில் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.

குஷ்புவின் இந்தப் பேச்சுக்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட, திருநங்கைகள் சுமார் 15 பேர் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.

இந்தப் போராட்டத்திற்கு அதிமுகவில் வாய்ப்புக் கேட்டு மனு அளித்துள்ள சுதா என்ற திருநங்கை தலைமை தாங்கினார்.

திருநங்கைகளின் இந்தப் போராட்டத்தால் சத்தியமூர்த்தி பவனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+