குஷ்புவுக்கு எதிராக கொந்தளித்த திருநங்கைகள்.. சத்தியமூர்த்தி பவன் முற்றுகை
சென்னை: திருநங்கைகள் குறித்து அவதூறாக கருத்துக் கூறியதாக குஷ்புவை எதிர்த்து சென்னை சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டு திருநங்கைகள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநங்கைகள் மூன்றாவது பாலினமாக அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு ஓட்டுரிமையும் அளிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் களமிறங்கவும் சில திருநங்கைகள் திட்டமிட்டுள்ளனர்.

சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் தேவி என்ற திருநங்கை சென்னை ஆர்.கே. நகரில் போட்டியிட உள்ளார். திருநங்கை ராதிகாவுக்கு சேலத்தில் வாய்ப்பு அளிப்பதாக தேமுதிக உறுதி அளித்திருக்கிறது. இதேபோல், திருநங்கை சுதா அதிமுகவில் வாய்ப்பு கேட்டு மனு அளித்துள்ளார்.
கடந்த லோக்சபா தேர்தலில் மதுரையில் சுயேச்சையாக போட்டியிட்ட பாரதி கண்ணம்மா, அதன் பிறகு சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் இணைந்தார். தற்போது அதிலிருந்து விலகிவிட்ட நிலையில், அப்துல் கலாம் லட்சிய இந்தியா கட்சி சார்பில் போட்டியிட பாரதி கண்ணம்மாவுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியொன்றில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு திருநங்கைகளுக்கு எதிரான கருத்துக்களைக் கூறியதாகத் தெரிகிறது. திருநங்கைகள் அரசியல் உரிமை கோரக்கூடாது என்ற கோணத்தில் அப்பேட்டியில் அவர் குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
குஷ்புவின் இந்தப் பேச்சுக்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட்ட, திருநங்கைகள் சுமார் 15 பேர் சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
இந்தப் போராட்டத்திற்கு அதிமுகவில் வாய்ப்புக் கேட்டு மனு அளித்துள்ள சுதா என்ற திருநங்கை தலைமை தாங்கினார்.
திருநங்கைகளின் இந்தப் போராட்டத்தால் சத்தியமூர்த்தி பவனில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications