கிருஷ்ணகிரியில் பயங்கரம்.. திருநங்கைகள் எட்டி உதைத்ததில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் பலி
கிருஷ்ணகிரி அருகே திருநங்கைகள் எட்டி உதைத்ததில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி: திருநங்கைகள் எட்டி உதைத்ததில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி-ஊத்தங்கரை அருகே ரயிலில் திருநங்கைகள் சிலர் பயணிகளிடம் பணம் வசூல் செய்துள்ளனர். அப்போது ரயிலில் பயணித்த 2 இளைஞர்கள் பணம் தர மறுத்துள்ளனர்.

இதனால் திருநங்கைகளுக்கும் அந்த இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞர்களையும் தாக்கிய திருநங்கைகள் ஓடும் ரயிலிலிருந்து அவர்களை எட்டி உதைத்தாக சக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் நிலைத்தடுமாறிய அந்த இளைஞர்கள் ரயிலில் இருந்து கீழே விழுந்தனர். இதில் ஆந்திராவை சேர்ந்த சத்தியநாராயணன் உயிரிழந்துள்ளார்.
மற்றொறு இளைஞர் பலத்த காயமடைந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காசுகொடுக்க மறுத்த இளைஞர்களை திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து எட்டி உதைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications