போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 1,670 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!
சென்னை: தமிழக போக்குவரத்துத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களில், சென்னை மாநகரத்தில் மட்டும் 1,670 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன.
தமிழக அரசு தேர்வாணையத்தால் நிரப்பப்படாத பிற துறை பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலமும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் விளம்பரப்படுத்தி நேரடியாகவும் தகுதியானவர்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்று சென்னை ஹைகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி போக்குவரத்து கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 746 டிரைவர்கள், 610 கண்டக்டர்கள், 261 தொழில்நுட்ப உதவியாளர்கள், 40 உதவி பொறியாளர்கள், 13 இளநிலை பொறியாளர்கள் உள்பட 1,670 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமும் பட்டியல் பெறப்பட்டுள்ளது. மேலும் நேரடியாகவும் விண்ணப்பம் செய்யலாம். இதற்கான விண்ணப்பங்கள் பல்லவன் சாலையில் உள்ள அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது. வருகிற 20 ஆம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அடுத்த மாதம் 8 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த தகவலை போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications