ஜெயலலிதா ஹெலிகாப்டர் இறங்குவதற்காக 16 மரங்கள் வெட்டிச்சாய்ப்பு: ரூ.7 லட்சம் அபராதம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் இன்று பிரசாரம் செய்யும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின், ஹெலிகாப்டர் தரையிறங்க, 'ஹெலிபேடு' அமைக்க, 16 மரங்களை வெட்டியதை கண்டித்து, திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம், அ.தி.மு.க.,வுக்கு, அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் பொன்மலை ரயில்வே பணிமனை வளாகத்திற்கு அருகில் ரயில்வேக்கு சொந்தமான ஜி கார்னர் பகுதியில் நடைபெறுகிறது. அருகே ஹெலிகாப்டர் இறங்க வசதியாக ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 16 யூகலிப்டஸ் மரங்கள் வெட்டப்பட்டன. இதை பல கட்சிகளும் கண்டித்துள்ளன.

Trees make way for Jayalalithaa's poll meet

இவ்வாறு வெட்டப்பட்ட மரங்களுக்கு அபராதத் தொகை வசூலிக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அத்துறை அதிகாரிகள் கூறுகையில், பொன்மலை ஜி கார்னரில் பொதுக்கூட்டம் நடத்த நாள் ஒன்றுக்கு 3.5 லட்ச ரூபாய் வாடகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

அதிமுகவினர் 2 நாட்கள் அந்த பகுதியை வாடகைக்கு எடுத்துள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட ரயில்வே இடத்தில் எந்த சேதாரமும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக நாள் ஒன்றுக்கு 3.5 லட்ச ரூபாய் வீதம் 2 நாட்களுக்கு 7 லட்ச ரூபாய் டெபாசிட்டாக பெறப்பட்டுள்ளது. சேதாரம் குறித்து விசாரித்த பின் டெபாசிட் தொகை 7 லட்ச ரூபாயினை அபராதமாக விதிப்பது பற்றி அறிவிக்கப்படும் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+