சாதி சான்றிதழ் கோரி அரிச்சலூரில் பூம்பூம் மாட்டுக்காரர்கள் பள்ளி முன்பு தர்ணா..பரபரப்பு
ஜாதி சான்றிதழ் வழங்க கோரி பழங்குடி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video

ஈரோடு: அரச்சலூரில் பழங்குடியினர் சாதிச்சான்று வழங்கக் கோரி பூம்பூம் மாட்டுக்காரர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகேயுள்ள ஜே.ஜே.நகரில் 200 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஜாதி சான்றிதழ் நீண்டகாலமாக வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், இதனால், மாணவர்கள் உயர்கல்வி பெறவும் வேலை வாய்ப்பு பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளதாகவும் பழங்குடி மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் தங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க்கோரி பள்ளி திறந்த முதல் நாளான இன்று தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பூம்பூம் மாட்டுக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் இவர்களது உறவினர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கியுள்ளதைப்போல தங்களுக்கும் வழங்க வேண்டும் என இவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். தங்களுக்கு உடனடியாக ஜாதிசான்றிதழ் வழங்காவிட்டால் தங்களது பட்டா, குடும்ப அட்டை போன்றவற்றை அரசிடம் திருப்பி வழங்க போவதாகவும் போராட்டத்தில் பழங்குடி மக்கள் தெரிவித்துள்ளனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications