மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருச்சியில் அனைத்து திருசபைகளின் கண்டன பொதுக் கூட்டம்
திருச்சி: மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருச்சியில் அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இன்னமும் வன்முறை ஓயவில்லை.

மணிப்பூரில் தொடரும் வன்முறைகளை கண்டித்தும் சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து அமைதியையும் மனிதநேயத்தையும் பாதுகாக்கக் கோரியும் திருச்சி மாவட்ட அனைத்து திருசபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் தமிழ்நாட்டின் திருச்சி புத்தூர் நால் ரோடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருசபையின் பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ், தென்னிந்திய திருசபையின் பேராயர் சந்திரசேகரன், கத்தோலிக்க திருசபையின் ஆயர் ஆரோக்கியராஜ், தலைமை தாங்கினர். மேலும் பௌலின்மேரி, மற்றும் கவிஞர் நந்தலாலா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கண்டன தீர்மானங்கள்: மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி குக்கி இனக் குழுக்கிடையே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இன அடிப்படையிலான மோதல்களையும் மதக்கலவரத்தையும் வன்முறைகளையும் தீவிரவாத தாக்குதல்களையும் படுகொலைகளையும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நீதியரசர்களை உள்ளடக்கிய உண்மை அறியும் குழு ஒன்று அமைக்கப்பட்டு முழுமையான அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
உயிர் பாதுகாப்பிற்காக வீட்டைவிட்டு அநாதைகளாக உணவின்றி வெவ்வேறு இடங்களில் தஞ்சமடைந்திருக்கிற மக்களுக்கு உணவு உடை மருத்துவம் உள்ளிட்ட அவசர உதவிகள் போர்கால அடிப்படையில் செய்யப்பட வேண்டும்.மேலும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்விற்காக நிவாரண முகாம்கள், அமைக்கப்பட்டு அப்பாவி மக்களின் உயிர்பலிக்கான இழப்பீட்டுக் தொகை வழங்கப்பட வேண்டும். வன்முறையினால் திட்டமிட்டு எரிக்கப்பட்ட மற்றும் தகர்க்கப்பட்ட தேவாலயங்கள் அரசாங்கத்தின் செலவில் மீண்டும் கட்டித்தரப்பட வேண்டும்.

தமிழக அரசு மணிப்பூர் மக்களைபாதுகாக்க தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் அறிக்கை வெளியிட வேண்டும்.
மதச்சார்பற்ற இந்திய அரசு நமது நாட்டில் இது போன்ற கலவரங்கள் நடக்காமல் தடுத்து இந்திய இறையாண்மையை காக்க வேண்டும்.தேசிய மனித உரிமை, சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர்ஆணையங்கள் தாமாக முன்வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உயிர் வாழும் மற்றும் வாழ்வாதார உரிமைகளை உத்திரவாதப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications