திருச்சி அருகே தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 35 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி அருகே தனியார் பேருந்து பாலத்தில் இருந்து தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
திருச்சியில் இருந்து அரியலூருக்கு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.

லால்குடி, பூவாளுர் கூலையாறு பாலத்தின் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென கரும்பு தோட்டத்தில் மூன்று முறை தலைக்குப்புற விழுந்தது. இதில் 35 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
இதில் 3 குழந்தைகளுக்கு தலையில் சிறு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களை லால்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் உயர் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உயிர் பலி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications