For Daily Alerts
Just In
திருச்சி அருகே ஓடிக் கொண்டிருந்த அரசு பஸ் மீது மரம் விழுந்து விபத்து - பயணி பலி
திருச்சி: முசிறி அருகே அரசு விரைவு பேருந்து மீது மரம் விழுந்த விபத்தில், பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மழை காரணமாக ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், மரங்கள் சாய்ந்தும் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன.
அந்தவகையில், திருச்சியிருந்து சென்னை புறப்பட்டுச் சென்ற அரசு விரைவு பேருந்து ஒன்று முசிறி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது உமையாள் புரம் அருகே சாலையில் இருந்த மரம் ஒன்று எதிர்பாராத விதமாக பேருந்து மீது விழுந்தது.
இதில், பேருந்தில் இருந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்ற பயணி உயிரிழந்தார்.
Comments
English summary
Near Musiri in Trichy district, a passenger was died when a tree fell down suddenly on the bus he was travelling.
Story first published: Monday, December 1, 2014, 12:08 [IST]