தீபாவளி கொண்டாடிய மாணவர்களை அடித்ததாக திருச்சி பள்ளி மீது பெற்றோர் புகார்
தீபாவளி பண்டிகையை கொண்டாடிய மாணவர்களை அடித்ததாக திருச்சி பள்ளி மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிய மாணவர்களை அடித்ததாக திருச்சி பள்ளி மீது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் உள்ள கீழ்ப்புதூரில் இயங்கி வருகிறது சர்வைட் பள்ளி. இங்கு 10-ஆம் வகுப்பு வரை உள்ளது.
தீபாவளி விடுமுறைக்கு பின்னர் இப்பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது இறை வணக்கத்தின்போது பட்டாசு வெடிக்காத மாணவர்கள் யார் யார் என பள்ளி தலைமை ஆசிரியை கேட்டுள்ளார்.

வெடிக்கவில்லை என கை உயர்த்திய மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை பாராட்டியதாகவும் பட்டாசு வெடித்தவர்களை அடித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பள்ளி நிர்வாகமோ கல்வித்துறை உத்தரவின் பேரில் நடந்து கொண்டதாக விளக்கம் தந்துள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications