தமிழகத்தில் ஆட்சியே நடைபெறவில்லை.. விரைவில் தேர்தல் வரும்.. திருச்சி சிவா சூசகம்
தமிழகத்தில் ஆட்சியே நடைபெறவில்லை என்றும் விரைவில் தேர்தல் வரும் என்றும் திமுக மாநிலங்களவை எம்.பி., திருச்சி சிவா கூறியுள்ளார்.
சேலம்: தமிழகத்தில் ஆட்சியே நடைபெறவில்லை எனவும் பிரதமர் மோடி தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு நேரம் ஒதுக்காதது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரியும், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி இந்தி திணிப்பு மற்றும் நீட் நுழைவு தேர்வு எதிர்ப்பு கருத்தரங்கம் நேற்று சேலத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இந்தி திணிப்பை பாஜக அரசு மெல்ல மெல்ல கொண்டு வருவதாகவும், நீட் தேர்வினால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவாகிவிடும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் நிலை குறித்தும், வறட்சி மற்றும் விவசாயிகள் பற்றியும் பேசுவதற்காக பிரதமரை சந்திக்க அனுமதி கேட்டும் நேரம் ஒதுக்கவில்லை என தெரிவித்தார். ஆனால், எந்த பதவியிலும் இல்லாத ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க, பிரதமர் நேரம் ஒதுக்கியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என குற்றம்சாட்டினார். மேலும் தமிழகத்தில் தற்போது ஆட்சியே நடைபெறவில்லை என்றும் விரைவில் தேர்தல் வரும் என்றும் அவர் கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications