90 வயதான ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள் காலமானார்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள் காலமானார். அவருக்கு வயது 90.
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் 50வது ஜீயராக இருந்தவர் ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள். 90 வயதான இவர், வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜீயர். இன்று சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
அவரது உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications