திருச்சியில் களைகட்டிய நவராத்திரி விழா.. கோவில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் பங்கேற்பு!
நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி திருச்சி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Recommended Video

திருச்சி: நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி திருச்சி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னை பராசக்தி அருள் வேண்டி செய்யும் பூஜையே நவராத்திரி ஆகும். துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் அம்பிகை வழிபாடு உள்ளது. சர்வ சத்ரு உபாதைகளில் இருந்து நீங்கவும், தோஷம் நீங்கி தைரியத்தை கொடுக்கும் துர்காதேவியையும், குபேரன் அருள் வியாபாரம் பெருக, செல்வ செழிப்பில் திளைக்க மகாலட்சுமியையும், இயல், இசை, நாடகம், கல்வி ஆகியவற்றில் சிறக்க 64 கலைகளையும் கற்றுக்கொள்ள சரஸ்வதிதேவியையும் என முப்பெரும் தேவிகளையும் நவராத்திரி விழாவில் வழிபாடு நடத்துவது உண்டு.

நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் பக்தர்கள் விரதம் இருந்து பூஜை செய்வார்கள். நவராத்திரியின் சிறப்பம்சமே வீடு மற்றும் கோவில்களில் கொலு அமைப்பதே ஆகும். கொலுவில் 9 படிகள் அமைக்கப்பட்டிருக்கும். அனைத்து பொருட்களிலும் அம்பிகையை காண வேண்டும் என்பதே கொலு மேடை படிகளின் தத்துவம் ஆகும். கொலு மேடையில் ஒவ்வொரு படிகளுக்கும் தனி தத்துவம் உண்டு. ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு வகையான பொருட்கள் களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் இடம்பெற்றிருக்கும்.
இதேபோல கோவில்களிலும் கொலு மேடை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி திருச்சியில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பகல் 1.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ஸ்ரீரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார்.
பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். இரவு 9.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ஸ்ரீரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவையொட்டி ஆரியபட்டாள் வாசல் அருகே நூறுகால் மண்டபத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் அமைக்கப்பட்டிருந்த சாமி பொம்மைகளை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருநாளான 16-ந் தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 18-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் ஜெயராமன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நவராத்திரி கொலு மண்டபம் வந்தடைந்தார். மண்டபத்தில் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி திருவடி சேவை நடைபெற உள்ளது. இதேபோல சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இரவு 7.30 மணிக்கு மேல் உற்சவ மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
அதைத்தொடர்ந்து மரக்கேடயத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். தொடர்ந்து வருகிற 19-ந்தேதி வரை அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். 18-ந்தேதி சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் காட்சியளிப்பார். விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு கோவிலில் நடந்து வருகிறது. வருகிற 19-ந்தேதி இரவு 7.30 மணிக்கு அம்மன் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் தலைமையில் மேலாளர் ஹரிஹரசுப்பிரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து உள்ளனர்.
[ பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது.. எம்பி தம்பிதுரை அட்வைஸ்! ]
மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் மட்டுவார் குழலம்மை ஏகாந்த சேவையில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். விழாவையொட்டி மாணிக்க விநாயகர் சன்னதி அருகே நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. விழா வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து அம்மன் ஏகாந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தென்னூர் பட்டாபிராமன் தெருவில் சீனிவாச பெருமாள் கோவிலில் பெருமாள் அனந்தசயன அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவில் சிறுவர், சிறுமிகள் பக்தி பாடல்களை பாடினர். இதேபோல வீடுகளில் பக்தர்கள் கொலு அமைத்து நேற்று முதல் வழிபாடு தொடங்கினர்.
-
"ஆஃபர் கொடுத்தாவது திமுக கூட்டணியை உடைக்க முயற்சி செய்தார்கள்”.. விஜய் மீது ஸ்டாலின் மறைமுக அட்டாக்! -
“அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல! ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்!” - ஸ்டாலின் -
“கர்தவ்ய த்வார்”.. திருச்சி ரயில்வே அலுவலக நுழைவுவாயில் இந்தியில் பெயர்! பொங்கி எழுந்த சு.வெங்கடேசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி.. இலவசமாக நகை மீட்கலாமா? ஆசையில் விழும் மக்கள் கவனிக்க வேண்டியது -
உறுதியான காங்கிரஸ் திமுக கூட்டணி! அறிவாலய அலார்ம்! சத்தியமூர்த்தி பவன் சரண்டர்! அதிகாலை முடிந்த டீல் -
ஈரோட்டில் ஆசை ஆசையாய் அப்பாவின் சொத்தை மாற்ற போன தினேஷ்.. அரசு ஊழியருக்கு ட்விஸ்ட் -
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய்












Click it and Unblock the Notifications