Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்தபோவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் வார்னிங்

தமிழக அரசு திடீரென வாட் வரியை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு திடீரென வாட் வரியை அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு தமிழ்நாடு டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இதை திரும்ப பெறாவிட்டல் மாநிலம் தழுவிய போரட்டம் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு டிப்பர்லாரி உரிமையாளர்கள் நலச்சம்மேளனத்தின் தலைவர் டி.ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

 Truck owners federation condemned TN govt hiked VAT on Petrol, Diesel price

பெட்ரோல் , டீசலின் வாட் வரியை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 3 ரூபாய் 78 காசுகளும், டீசல் ஒரு லிட்டருக்கு 1 ரூபாய் 76 காசுகள் உயர்ந்துள்ளது.

டீசல் உயர்வால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்புள்ளது.

அதுமட்டுமில்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு இரண்டு முறை விலை நிர்ணயம் செய்து உயர்த்துகிறார்கள். மேலும் பழைய 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியானது முதல் எங்களின் தொழில் முடங்கிகிடக்கிறது.

எனவே தமிழக அரசு இன்று இரவுக்குள் வாட் வரி உயர்வை திரும்ப பெறவேண்டும். இல்லையென்றால் மாநிலம் தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தபோவதாக திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு ரவிச்சந்திரன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+