For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோர்ட் தடையால் கைதில் இருந்து எஸ்கேப்...தெம்போடு திருச்சியில் திறந்தவெளி ஜீப்பில் பவனி வந்த தினகரன்

டிடிவி தினகரனை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ள நிலையில் அதே தெம்போடு திறந்த வெளி ஜீப்பில் பவனி வந்தார் டிடிவி தினகரன்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Recommended Video

    எடப்பாடியார் குறித்து தினகரன் விமர்சனம்-வீடியோ

    திருச்சி: திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டம் தொடங்கியது. இதில் பங்கேற்று பேச திறந்த வெளி ஜீப்பில் ஊர்வலமாக வந்தார் டிடிவி தினகரன்.

    அதிமுகவின் திருச்சி எம்.பி ப.குமார் எம்.பி அளித்த புகாரின் பேரில் திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை தினகரனுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த நிலையில் ஹைகோர்ட் கிளை தினகரனை கைது செய்ய இடைக்கால விதித்தது.

    TTV Dhinakaran rally against NEET in Trichy

    இந்த தெம்போடும், புதிய உற்சாகத்தோடும் டிடிவி தினகரன் திருச்சியில் நடைபெறும் நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் உற்சாகமாக பங்கேற்றுள்ளார்.

    நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் திருச்சி உழவர் சந்தையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

    TTV Dhinakaran rally against NEET in Trichy

    இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுருந்து ஆயிரக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் குவிந்ததுள்ளனர்.

    இந்த பொதுக்கூட்டம் கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதற்கு அனுமதி தர மாநகராட்சி மறுத்து விட்டது. இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின அனுமதியோடு இன்றைய நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    English summary
    The AIADMK faction led by sacked party deputy general secretary TTV Dhinakaran has begins for a rally against the National Eligibility cum Entrance Test (NEET) in Trichy on today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X